Sunday, February 13, 2011

சில உதாரணங்கள்!

ஒரு சமயம் தமிழ்நாடு முதலமைச்சர் பீகார் சென்றிருந்தார். அங்கு உருளைக் கிழங்கு அமோக விளைச்சல். விற்க முடியாமல் விவசாயிகள் திணறல். இவர் ஆயிரம் டன்கொள்முதல் செய்தார். அதிகாரிகள் பச்சை உருளைக் கிழங்கை பறித்த நிலையில் வாங்கி அதனை அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ் செட்டுக்கு கொண்டு வந்து அவைகளை புக் செய்ய பத்து நாள் பிடித்தது. அதற்குள் இருபது சதவீதம் கிழங்குகள் கெட்டுவிட்டன. அவைகளை water tight வாகன்களில் ஏற்றினர். கூட்ஸ் வண்டி சென்னை சால்ட் கொட்டார்ஸ் வந்து சேர முப்பது நாட்களுக்கு மேல் ஆனது. அதற்குள் வாகன் பூராவும் பச்சை பச்சையாக ஒழுக ஆரம்பித்துவிட்டது. வாகன் கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த அடையாள சீட்டுகள் கூட நைந்துபோய் விட்டது. இந்நிலையில் சென்னையில் transhipment செய்யப்படவேண்டும். கூலியாட்கள் நாற்றம் தாங்கவில்லை. வயிற்றை புரட்டுகிறது என்று கூறி விட்டனர். எப்படியோ சமாதானப் படுத்தி கீழே இறக்கி வைத்து பிறகு அந்தந்த சேரும் இடங்களுக்கான வாகன்களில் ஏற்றினார்கள். இதற்குள் மொத்தம் அழுகி மண்வெட்டியால் வாரி வாரிக் கொட்டும் நிலை அடைந்துவிட்டது. இதற்க்கு பத்து நாட்கள் ஆனது. இப்படியாக வேலூர் வந்து சேர்ந்தது 200 டன் கிழங்கு. அதனை வாகன்களில் இருந்து இறக்க, ரயில்வே ரசீது வரவில்லை,placement இல்லை, கிரெடிட் நோட் இல்லை ஆகிய தடங்கல் தாண்டியதும் இறக்குகிற கூலியாட்கள் அனைவரும் இந்த வாகன் வந்ததில் இருந்து வாந்தி, மயக்கம் என்று கூறி வேலை நிறுத்தம் செய்துவிட்டனர். கூட்ஸ் கிளார்க்கும் உதவியாளரும் லீவு போட்டுவிட்டு ஓடிவிட்டனர். பல நாட்கள் போராடி scavengars அழைத்து வந்து இறக்கி லாரியில் ஏற்றி கண்காணாத ஒரு ஏரியில் பள்ளம் தோண்டி உருளை கிழங்குகள் புதைக்கப் பட்டன. இதற்கும் பொது சுகாதார அதிகாரி சான்று, கிராம மக்கள் கூட்டம் போட்டு அவர்கள் சம்மதம் வாங்குதல் போன்ற வேலை வேறு. ஆனால், நமது பொது கணக்காளர்,audit ரிப்போர்ட் என்ன எழுதியிருப்பார் என்று நினைக்கிறீர்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சரக்கு இறுதியாக இறக்கப்பட்ட இடங்களில் டேமரேஜ், வார்பெஜ் ஏன் அதிகம் ஆகியது என்று விளக்கம் கேட்டார்.
மொத்த விவகாரமும் அவருக்கு விளக்கியபின், "நான் நேரடியாகப் பார்த்தேன். வேறு வழி இல்லாத நிலையில் தான் இந்த செலவினம் ஆகியது" என்று மாவட்ட ஆட்சி தலைவர் கையெழுத்து வாங்கி அனுப்புங்கள்; நாங்கள் கோப்பை அத்துடன் முடித்துக் கொள்கிறோம் என்று பொது கணக்காளர் சொல்லி விஷயம் முடிந்தது.

" எனவே நானே நேரில் அலசிப் பார்த்துவிட்டேன்; வேறு வழியில்லை; கோப்பினை முடித்துக் கொள்ளலாம் என்று சம்பந்தப் பட்ட அமைச்சர், பிரதமர் சான்று கொடுத்தால் 2G -யும் அதோடு முடிவடையும்."

No comments: