Monday, January 31, 2011

ஸ்ரீ ராம சர்மா எழுதுகிறார்! சி.எ.ஜி. பற்றி!

2G அலைக்கற்றை விவகாரத்தில் திரு. ராஜா தவறுகள் ஊழல்கள் பற்றி எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. பாராளுமன்ற குழு விசாரணைக்கு மேற்படி விவகாரம் உட்படுத்தப் படவேண்டும் என்பது சரியானது தான்.
இருப்பினும் இந்த சி.எ.ஜி. பற்றி எனக்கு சில கருத்துக்கள் உண்டு. அமைச்சர்களை கூண்டில் ஏற்றுவதற்கோ, செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை தண்டிப்பதற்கோ அதன் அறிக்கை பயன்பட்டதாக வரலாறு கிடையாது. அரசு தரப்பில் நடந்த வரவினங்கள், செலவினங்கள் சட்டம், விதிகள் படி நடந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு அவருடைய வேலை முடிந்தது. CAG எழுதின தணிக்கை மறுப்புகளை அவரது அலுவலகத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர்களை அழைத்து வந்து பதில் எழுதிக் கொடுத்தல், சரி செய்யப்பட்டது
(Settled) என்று எழுதி க்ளோஸ் செய்து கொள்வார்கள். CAG அலுவலகத்தில் பார்க்கவேண்டிய கணக்குகளே தவறாகவும் பதில் சொல்லப்படாமலும் கிடக்கும். சில உதாரணங்கள் பார்ப்போமா!