Saturday, February 28, 2009

வீர பாண்டிய கட்டபொம்மன்!

அந்த உள்நோக்கம் ஜாதியை அடிப்படையாகக் கொண்டதா: அல்லது வாரிசு போட்டியினால் ஏற்பட்டதா என்பதை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீர பாண்டிய கட்டபொம்மன்!

இதை குமுதத்திலேயே எழுதினால் விற்பனை பாதிக்கும் என்பதால் கல்கண்டில் எழுத வைத்தார்கள். வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு தடங்கலாக என்னென்ன செய்ய முடியுமே அதையும் செய்தார்கள். பிறகு ஏ.எல்.சீனிவாசன் என்பவரைக் கொண்டு சிவகங்கைச் சீமை என்று போட்டியாக ஒரு படம் தயாரித்தார்கள். ம.பொ.சிவஞானம் உறுதியாக கட்டபொம்மன் படத்திற்கு support கொடுத்தார். ஒரு வழியாக கட்டபொம்மன் படம் வெளியில் வந்தது. அந்த படம் பல நாடுகளில் நடைபெற்ற திரைப் பட விழாக்களில் சிறந்த படம் என்று பரிசுகளை குவித்தது. சிவாஜி கணேசனுக்கு புகழ் மகுடம் சேர்த்தது. ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டம் கிடைத்தது. பொது மக்களும் பத்திரிகைகளும் பாராட்டின. குமுதம் மட்டும் "சிவாஜியின் நடிப்பு மிகை" என்று எழுதி பொறாமை பொச்செரிப்பைக் காட்டிக் கொண்டது. அதற்கு ஒரு ரசிகர் "சிவாஜியின் நடிப்பு மிகை என்று சொல்லி பகைவனாகிவிட்ட உன் சிகையை எடுத்தெரிய புகை வண்டியில் ஏறிவிட்டோம் ஜாக்கிரதை" என்று எழுதி இருந்தார். சிவகங்கை சீமை படத்தில் கட்டபொம்மனை தாக்கி ஏதும் வசனம் இடம் பெறாமல் பார்த்துக் கொண்ட போதிலும், நடிப்பும் பாடலும் நன்றாகவே இருந்தபோதிலும் இவர்களின் கட்டபொம்மன் எதிர்ப்பாலும், கட்டபொம்மன் பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்று விட்டதாலும் சரியாக ஓடவில்லை.
கல்கண்டு பத்திரிகையின் விற்பனை பல மடங்கு டவுன் ஆகிவிட்டதால் "கொள்ளைக் காரன்" கட்டுரையை ஒரு வழியாக நிறுத்திக் கொண்டார்கள். அவர்களின் legacy தான் கட்டபொம்மனை அவதூறாக பேசுபவர்கள். அவர்களுக்கு ஒரு பயங்கர உள் நோக்கம் உள்ளது.

Friday, February 27, 2009

வீர பாண்டிய கட்டபொம்மன்!

சில வாரங்களுக்கு முன்னர் நாளேடுகளில் ஒரு சிறிய இடத்தை ஒரு செய்தி ஆக்ரமித்து இருந்தது. கட்டபொம்மனை பற்றி ஒரு சிலர் அவதூறாக பேசியதாகவும் அதனால் அடிதடி கலாட்ட ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு நடவ்டிக்கை எடுக்கப் பட்டதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அவதூறாக பேசுகிறவர்களும் உண்டா என சிலர் ஆச்சரியமாக கேட்கிறார்கள். இதுக்கு ஒரு கூட்டமே உண்டு.
கல்கண்டு என்று ஒரு வார பத்திரிக்கை அரை நூற்றாண்டுக்கு முன்னர் வெளி வந்து கொண்டிருந்தது. குமுதம் பத்திரிகையின் "வால்" என்று அதைப் பற்றி கூறுவார்கள். குமுதம் பத்திரிகையின் உரிமையாளர்களுக்கு கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியர் தமிழ்வாணன் தூரத்து உறவினர் ஆவார். நியுஸ் பிரிண்ட் கோட்டா அதிகமாக பெறுவதற்கும் இது போன்ற வால்கள் பயன்பட்டன. இந்த தமிழ்வாணன் கன்னிமேரா லைப்ரரியில் உட்கார்ந்து சிகிரெட் பிடித்துக்கொண்டு புத்தகம் படிப்பார். அதிலிருந்து காபியும் குறிப்பும் எடுத்துக்கொள்வார். அவைகள் துணுக்குகளாக கல்கண்டு பத்திரிகையில் வரும். முதலில் வரும் துணுக்கிற்கு பின்னால் வருவது முன்னுக்குப பின் முரணாக இருக்கும். குமுதம் வகையறாக்களுக்கு கட்டபொம்மனை பிடிக்காது. வீர பாண்டிய கட்டபொம்மன் படம் தயாரிக்க போவதாக செய்தி வந்ததும் இவர்கள் தமிழ்வாணனை விட்டு நாடோடி பாடல் சிலதை அடிப்படையாக வைத்துக்கொண்டு "கொள்ளைக் காரன் கெட்டி பொம்மு" என்று ஒரு தொடர் கட்டுரை கல்கண்டு பத்திரிகையில் வெளியிட வைத்தார்கள். அடுத்த அஞ்சலில் அதைப் பற்றி பார்ப்போமா!

Saturday, February 21, 2009

உயர் நீதி மன்றம் படும் பாடு!

சிதம்பரம் தீக்ஷிதர் வழக்கில் தன்னை ஒரு பார்ட்டியாக சேர்த்துக்கொள்ள கோரும் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் வந்த சுப்ரமணியம் சுவாமி மீது அழுகின முட்டையை வக்கீல்கள் வீசியுள்ளனர். நடவடிக்கைக்கு பயந்து அவர் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் பொய்ப் புகார் கொடுத்து அதை பதிவு செய்தால் தான், நீதி மன்ற அறைக்குள் தவறு செய்த வக்கீல்களை கைது செய்ய விடுவோம் என்று மறியல் செய்து காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்து ரிக்கார்டுகளை கொளுத்தி வக்கீல்கள் கலாட்டா செய்தது கேள்விப் படும் யாரும் நாடு போகும் போக்கு குறித்து கவலை படாமல் இருக்க மாட்டார்கள். சம்பந்தப் பட்ட அனைத்து வக்கீல்களையும் debar செய்வது தான் ஒரே தீர்வு ஆகும்.

Tuesday, February 10, 2009

Srilanka!

Whenever a war breaks out, it is ordinary citizen who bear the brunt. LTTE ask ordinary citizens to cover them. Order them not to go to War peace zone arranged by the Sinhala. If they move, LTTE shoot. If they don't move, sinhala military bombard them in the name of attaking LTTE stronghold. In these bitter conditions about 2.5 to 3 lakh tamilians are trapped. They are natives of that place. They come from yazh and so many other places. LTTE started in the name of achieving better livelihood of Tamils. If they really care for Tamil lives, they have to surrender and leave it to the Tamil speaking people of world to do the rest. This is also a kind of renunciation and sacrifice. Sacrificing the ego. It would be heartily welcomed by the world. Will they listen?